.

Pages

Saturday, November 28, 2015

அதிரை பேரூராட்சி 15 வது வார்டில் வடிகால் தூர்வாரும் பணி !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதிகளில் வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணி நடைபெற்றது.

பொதுமக்கள் மற்றும் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரின் கோரிக்கை அடிப்படையில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், துணைத்தலைவர் பிச்சை செயல் அலுவலர் முனியசாமி ஆகியோரின் உத்தரவின் பேரில் மழை காலங்களில் தேங்கி நிற்கும் நீரை சீராக கொண்டுசெல்லும் வகையில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு காட்டுப்பள்ளி தெரு பகுதி, மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிழக்கு பகுதியில்  உள்ள வடிகால் வாய்க்கால் ஆகியவற்றில் தூர் வாரும் பணி நடைபெற்றது. இந்த பணிக்காக ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்பட்டன. மேலும் இந்த பகுதியில் படர்ந்து காணப்பட்ட முட்புதர்கள் அகற்றும் நடவடிக்கைகளில் அதிரை பேரூராட்சி 15 வது வார்டு கவுன்சிலர் அப்துல் லத்திப் மற்றும் மேஸ்திரி நாடிமுத்து ஆகியோரின் மேற்பார்வையில் அதிரை பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் பாதைகள் சரிசெய்யப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.