.

Pages

Saturday, November 28, 2015

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது.!


பிறந்த குழந்தை ஏன் அழுகிறது.!

இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது 

காரணங்கள் என்ன?
இதோ தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அது மட்டும் அல்து அழுகின்ற குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

இப்படி பலர் நினைக்கின்றனர்.

வேறு சிலர் இப்படி கூறுகின்றனர்.

அதாவது, குழந்தை பிறந்தவுடன், சீரான சுவாசம் பெறுவதற்கு நுரையீரல் சீராக இல்லாமல் சுருங்கியே இருக்கும், அது விரிவடைய வேண்டுமானால், அதில் உள்ள பல்லாயிரக் கணக்கான அறைகள் திறக்க வேண்டும். அந்த அறைகள் திறந்தால் தான் சீராக முறையில் சுவாசிக்க முடியும்.

அதனாலேயே, இயற்கையிலேயே குழந்தை பிறந்த உடன் அலறுகிறது, அப்படி அலறும்போது நுரையீரலில் உள்ள அறைகள் படிப்படியாக திறக்குமாம்.

இன்னும் வேறு சிலர் இப்படி கூறுகின்றனர்.

அதாவது, குழந்தை தாயின் கருவறையில், தாயின் சூட்டோடு இருந்து விட்டு, வெளியில் வந்ததும் வித்தியாசமான சீதோஷ்ண நிலையின் காரணமாகவும் இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

எது எப்படி? என்னதான் இருந்தாலும் குழந்தை பிறந்த உடன் அழுதே தீரும் என்று முதியோர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் கூறப்போவது என்னவோ? எதுவோ?

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.

1 comment:

  1. குழந்தை பிறந்த உடன் ஷைத்தான் தீண்டுவதினல்தான் அழுகிறது

    மர்யம் அன்னையாரையும் அவருடைய மகனார் ஈசா (அலை) அவர்களையும் தவிர வேறெந்த மனிதரும் பிறக்கும் போது ஷைத்தான் தீண்டாத நிலையில் பிறப்பதில்லை!ஷைத்தான் தீண்டுதலால்தான் குழந்தை சப்தமிட்டு அழுகிறது.

    நூல்:புகாரி,முஸ்லீம்

    M.JAHIR HUSSAIN

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.