.

Pages

Monday, November 23, 2015

கடல்போல் காட்சியளிக்கும் செக்கடி குளத்தில் உற்சாக குளியல் !

அதிரை பேரூராட்சியின் சார்பில் அதிரை அருகே உள்ள நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைத்து ஆலடிக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆலடிக்குளம் நிரம்பியதை அடுத்து சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள செக்கடி குளத்திற்கு கடந்த சில தினங்களாக தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து வந்தடைந்த பம்பிங் நீரால் செக்கடி குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது.

இதையடுத்து இன்று காலை இந்த பகுதியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். குளத்தில் டைவ் அடித்து, நடுப்பகுதி வரை நீந்தியும் செல்கின்றனர். குளத்தில் காணப்படும் பச்சை நிற பாசிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

காலை நேரத்தில் செக்கடி குளம் நடை மேடையில் வாக்கிங் செல்வோர் குளத்தில் குளிப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் பார்வையிடுகின்றனர்.
செக்கடி குளத்தில் குளித்து மகிழ இந்த பகுதியினர் தொடர்ந்து ஆர்வம் காட்டுவதால் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரை செக்கடி பள்ளி குளத்திற்கு செல்லும் வாசல் பகுதியை திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செக்கடி குளத்தை சுற்றி நடை மேடை பூங்கா அமைத்த பிறகு முதல் முறையாக தண்ணீர் வந்தடைந்து குளம் முழுவதும் நிரம்பியுள்ளது. இந்த நிலையில் முதல் குளியலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் இன்று காலை தொடங்கி வைத்தார். இவரோடு இவரது நண்பர்களும் உற்சாகமாக குளித்தனர்.

8 comments:

  1. காலையில் வாக்கிங் செல்வது பெண்கள் அல்லவா?அவர்களா குளிப்பதை பார்த்து மகிழ்கின்றார்கள்!!!!???

    ReplyDelete
  2. காலையில் வாக்கிங் செல்வது பெண்கள் அல்லவா?அவர்களா குளிப்பதை பார்த்து மகிழ்கின்றார்கள்!!!!???

    ReplyDelete
  3. காலையில் வாக்கிங் செல்வது பெண்கள் அல்லவா?அவர்களா குளிப்பதை பார்த்து மகிழ்கின்றார்கள்!!!!???

    ReplyDelete
  4. Hahaaa sariyaana question Jahufar.namma ooril ulla road anaithilum ondru kooda uruppadyana road illai.avlo mosamaagha irukkindradhu mudhalil indha roadai saripannungal piraghu kulatthukku thannir vidalaam yella pakkam mazhai peidhu thannir perukkedhutthu oaduhindradhu . Ippadi gents kulippadhai photo pottu asingapaduthadhirgal.kulatthai mattum photo yedutthu pottal yenna?

    ReplyDelete
  5. அந்த நாள் நினைவுகள் வந்ததன. மகிழ்ச்சி. அதே நேரம் சகோதரர் ரபீக் அவர்கள் குறிப்பிட்டுள்ள சாலை விஷயமும் அடுத்தபடியாக கவனிக்கப்படவேண்டிய அவசியமான காரியமாகும்.

    பாரூக் காக்கா கரையில் நிற்கிறார்கள்.

    ஒரு காலத்தில் ( 1968 ? ) செக்கடிக் குளத்தில் என் சி சி ஆண்டுவிழாவில் நீச்சல் போட்டி நடைபெறும். அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அவர்கள். இவ்வாண்டும் அவ்விதம் ஒரு போட்டி நடத்தப்படுமா?

    ReplyDelete
  6. To Chairman Aslam,you don't know our people say always The foods are very bad.after filling their stomach.

    ReplyDelete
  7. ZAEISA says: சேர்மன் அவர்களுக்கு:” உங்களுக்கு தெரியாதா நமதூர் மக்கள் வயிறார உண்ட பிறகுதான் உணவு சரியில்லை என்பார்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.