.

Pages

Saturday, November 28, 2015

சிஎம்பி லேன் பகுதியில் புதிதாக 2 மின்கம்பங்கள் அமைப்பு !

அதிரை பேரூராட்சி 21 வது வார்டுக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பிரதான சாலையோரத்தில் சுமார் 100 மீட்டர் நீளமுள்ள மின்கம்பிகள் தொங்கி காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.

'3 பேஸ் இணைப்புகளை கொண்ட இந்த மின்கம்பிகள் பொதுமக்களின் தலையில் மீது எந்தநேரமும் விழக்கூடிய சூழலில் அபாயகரமாக தொங்கி காணப்பட்டது. பலத்த காற்று வீசினாலோ அல்லது மின்கம்பத்தில் வாகனங்கள் மோதினாலோ மின்கம்பிகள் அறுந்து பொதுமக்கள் மீது விழும் சூழல் இருந்தது. இந்த பகுதியில் அதிகமாக விளையாடி வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என இப்பகுதியினர் பெரும் அச்சப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற் பொறியாளர் ஆகியோரிடம் தொடர் கோரிக்கை வைத்தார். அதில் அதிக இடைவெளி கொண்ட மின்கம்பங்கள் இடையே புதிய மின்கம்பங்களை நடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை சிஎம்பி லேன் பிராதான சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கி காணப்பட்ட இரு இடங்களில் புதிய மின்கம்பங்கள் நடும் பணியில் அதிரை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில் மின்சார வாரிய 14 ஊழியர்கள் தீவிர பணிகளில் ஈடுபட்டனர்.

அதிரை பேரூராட்சி 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம்
நடந்து வரும் பணியை நேரில் பார்வையிட்டு, தனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.