'3 பேஸ் இணைப்புகளை கொண்ட இந்த மின்கம்பிகள் பொதுமக்களின் தலையில் மீது எந்தநேரமும் விழக்கூடிய சூழலில் அபாயகரமாக தொங்கி காணப்பட்டது. பலத்த காற்று வீசினாலோ அல்லது மின்கம்பத்தில் வாகனங்கள் மோதினாலோ மின்கம்பிகள் அறுந்து பொதுமக்கள் மீது விழும் சூழல் இருந்தது. இந்த பகுதியில் அதிகமாக விளையாடி வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என இப்பகுதியினர் பெரும் அச்சப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற் பொறியாளர் ஆகியோரிடம் தொடர் கோரிக்கை வைத்தார். அதில் அதிக இடைவெளி கொண்ட மின்கம்பங்கள் இடையே புதிய மின்கம்பங்களை நடுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை சிஎம்பி லேன் பிராதான சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக தொங்கி காணப்பட்ட இரு இடங்களில் புதிய மின்கம்பங்கள் நடும் பணியில் அதிரை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் மேற்பார்வையில் மின்சார வாரிய 14 ஊழியர்கள் தீவிர பணிகளில் ஈடுபட்டனர்.
அதிரை பேரூராட்சி 21 வது வார்டு உறுப்பினர் முஹம்மது இப்ராஹீம்
நடந்து வரும் பணியை நேரில் பார்வையிட்டு, தனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்த மின்சார வாரிய அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
This comment has been removed by the author.
ReplyDelete