.

Pages

Monday, November 16, 2015

அதிரை அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து கணவன் - மனைவி படுகாயம் !

அதிரை அடுத்துள்ள செந்தலைபட்டினம் மாருதிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் புஹாரி ( வயது 45 ) இவருடைய மனைவி தவ்லத் பீவி ( வயது 40 ) மகள் ஷபனா ( வயது 21 ) மகன் அப்துல்லா ( வயது 15 ). ஷபனாவின் ஒரு வயது குழந்தை ஆகிய 5 பேரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இந்த மழையால் புஹாரி வீட்டு சுவர் முழுவதும் நனைந்திருந்தது. அவரது வீடு கூரை வீடு ஹாலோ பிளாக் கல்லால் சுவர் எழுப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் புஹாரி வீட்டின் உட்புற சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த புஹாரி மற்றும் தவ்லத் பீவி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர், சேதுபாவா சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சுவர் இடிந்து விழுந்த போது ஷபானா, அப்துல்லா ஆகியோர் வீட்டின் மற்றொரு பகுதியில் படுத்திருந்ததால் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    மிகவும் தெளிவான செய்திகளும் அழகான வரிகளிலும் அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார செய்திகளை, பதிவு செய்துவருகிறீர்கள்
    அதைப்போன்று எங்களது ஊரில் நடைப்பெற்ற சம்பவத்தை சுட்டிக் காட்டியதற்கு, ஸலாத்தினை தெறிவித்துக்கொள்கிரேன்
    இன்னும் மென்மேலும் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் நல் அருள் புரிவானாக

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.