புதிய பேருந்து நிலைய வளாக முழுவதும் தினமும் சுத்தம் செய்து குப்பைகள் அகற்றி தூய்மை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு கடைகளிலும் வாசலில் குப்பை தொட்டி வைத்து சேகரித்த குப்பைகளை தினமும் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்த கடைகளின் உரிமத்தினை ரத்து செய்ய மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். எரியாத மின் விளக்குகள் அனைத்து பழுது நீக்கம் செய்யப்பட்டு புதிய மின் விளக்குகளை பொருத்த வேண்டும். தேவையற்ற ஆக்ரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். உணவு பண்டங்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்வதை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து பேருந்துகளும் அதற்கான ஒதுக்கப்பட்ட பேருந்து கட்டைகளில் நிறுத்தப்பட வேண்டும். பொது மக்களுக்கு இடையூறாக பேருந்துகள் நிறுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு போக்குவரத்து கழகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தஞ்சாவூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொது மக்கள் வந்து செல்வதால் அவர்களுக்கு வேண்டிய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டும். பயணிகள் உட்காரக் கூடிய இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தினால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் திரு.த.குமார், பொறியாளர் திரு.ஆர்.சீனிவாசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் செந்தில், நகரமைப்பு அலுவலர் திரு.கோவிந்தசாமி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
//ஒவ்வொரு கடைகளிலும் வாசலில் குப்பை தொட்டி வைத்து சேகரித்த குப்பைகளை தினமும் அகற்றப்பட வேண்டும். அவ்வாறு செய்த கடைகளின் உரிமத்தினை ரத்து செய்ய மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.//
ReplyDeleteஎன்ன அநியாயம்!