.

Pages

Monday, November 30, 2015

சென்னையில் சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு ரூ 44 ஆயிரம் மருத்துவ நிதி உதவி !

அதிரை எம்எஸ்எம் நகரை சேர்ந்தவர் எம். முஹம்மது புஹாரி. இவரது மகன் ஜெஹபர் சாதிக் ( வயது 30 ) இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக கடந்த 8 ஆண்டுகளாக தட்டு வண்டி ஓட்டி வந்தார். இதன் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் பெற்றோருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திடீரென இவரது கால்கள் இரண்டும் செயல் இழந்து நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளானர். போதிய வசதிமின்மையால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார். இந்த நிலையில் இவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசாமாகி வருவதை அறிந்த இவரது குடும்பத்தினர் நமதூர் மருத்துவர் டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அப்துல் ஹக்கீம் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு கடந்த இரண்டு வாரங்களாக தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது.

ஏழ்மை நிலையில் இருக்கும் வாலிபரின் பெற்றோர் சார்பில் நிதி உதவி கோரி இருந்தனர். இதுதொடர்பாக அதிரை நியூஸில் செய்தி வெளியிடப்பட்டது. இவற்றை பார்வையிட்ட உலகங்கிலும் உள்ள அதிரை மற்றும் வெளியூர் அன்பர்கள் நிதிஉதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜித்தா வாழ் அதிரையர் எஸ். தஸ்லீம் மூலம் சவூதி ஜித்தா வாழ் நண்பர்கள் வழங்கிய ரூ 25 ஆயிரம், வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ நிதி உதவிகளை ஏழை எளியோருக்கு தொடர்ந்து வழங்கி வரும் லண்டன் வாழ் சமூக ஆர்வலர் அதிரை எஸ்.ஏ இம்தியாஸ் மூலம், லண்டன் நண்பர்கள் வழங்கிய ரூ 11 ஆயிரம், அமெரிக்கா கலிபோர்னியாவில் பைசல் மூலம் திரப்பட்டப்பட்ட ரூ 5 ஆயிரம், செக்கடி மேடு நண்பர்கள் வழங்கிய ரூ 3 ஆயிரம், ஆகக்கூடுதல் ரூ 44 ஆயிரத்தை வாலிபரின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

இந்த நிதியை எம்.எஸ்.எம் நகர் ஜமாத் நிர்வாகி வாப்பு மரைக்காயர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அஹமது, சமூக ஆர்வலர் சமியுல்லாஹ் ஆகியோர் வழங்கினார்கள். மருத்துவ நிதிஉதவியை பெற்றுக்கொண்ட வாலிபரின் பெற்றோர் நிதிஉதவி வாரி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
 

2 comments:

  1. அதிரையில் சமூக சேவையில் ஈடுபடும் சகோதரர்களை அதிரை நியூஸ் வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் மஜ்லீஸ் கார்டன் நிர்வாகி சமியுல்லாவை அதிரை நியூஸ் ஊக்கப்படுத்தியுள்ளது. இவர் பணி சிறக்க எனது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.