இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திடீரென இவரது கால்கள் இரண்டும் செயல் இழந்து நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளானர். போதிய வசதிமின்மையால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார். இந்த நிலையில் இவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசாமாகி வருவதை அறிந்த இவரது குடும்பத்தினர் நமதூர் மருத்துவர் டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அப்துல் ஹக்கீம் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு கடந்த இரண்டு வாரங்களாக தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது.
ஏழ்மை நிலையில் இருக்கும் வாலிபரின் பெற்றோர் சார்பில் நிதி உதவி கோரி இருந்தனர். இதுதொடர்பாக அதிரை நியூஸில் செய்தி வெளியிடப்பட்டது. இவற்றை பார்வையிட்ட உலகங்கிலும் உள்ள அதிரை மற்றும் வெளியூர் அன்பர்கள் நிதிஉதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜித்தா வாழ் அதிரையர் எஸ். தஸ்லீம் மூலம் சவூதி ஜித்தா வாழ் நண்பர்கள் வழங்கிய ரூ 25 ஆயிரம், வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ நிதி உதவிகளை ஏழை எளியோருக்கு தொடர்ந்து வழங்கி வரும் லண்டன் வாழ் சமூக ஆர்வலர் அதிரை எஸ்.ஏ இம்தியாஸ் மூலம், லண்டன் நண்பர்கள் வழங்கிய ரூ 11 ஆயிரம், அமெரிக்கா கலிபோர்னியாவில் பைசல் மூலம் திரப்பட்டப்பட்ட ரூ 5 ஆயிரம், செக்கடி மேடு நண்பர்கள் வழங்கிய ரூ 3 ஆயிரம், ஆகக்கூடுதல் ரூ 44 ஆயிரத்தை வாலிபரின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிதியை எம்.எஸ்.எம் நகர் ஜமாத் நிர்வாகி வாப்பு மரைக்காயர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அஹமது, சமூக ஆர்வலர் சமியுல்லாஹ் ஆகியோர் வழங்கினார்கள். மருத்துவ நிதிஉதவியை பெற்றுக்கொண்ட வாலிபரின் பெற்றோர் நிதிஉதவி வாரி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அதிரையில் சமூக சேவையில் ஈடுபடும் சகோதரர்களை அதிரை நியூஸ் வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் மஜ்லீஸ் கார்டன் நிர்வாகி சமியுல்லாவை அதிரை நியூஸ் ஊக்கப்படுத்தியுள்ளது. இவர் பணி சிறக்க எனது உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteNo publicity pls
ReplyDelete