.

Pages

Thursday, November 19, 2015

திமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளராக பழஞ்சூர் K.செல்வம் நியமனம் !

அதிரை அடுத்துள்ள பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் K. செல்வம். அதிரை மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதி பொதுமக்களிடையே அன்பாக பழகக்கூடியவர். திமுக மாநில பொருளாளர் மு.க ஸ்டாலின் அவர்களின் நீண்டகால விசுவாசி. திமுக சார்பில் நடத்துகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.

இந்த நிலையில் திமுக மீது இவர் காட்டி வரும் அதிக ஈடுபாட்டை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் ஆகியோரின் பரிந்துரை அடிப்படையில், திமுக மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் வாகை சந்திரசேகர் அவர்கள் திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளராக பழஞ்சூர் K. செல்வம் அவர்களை அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு திமுக தலைமையகத்தின் சார்பில் இன்று வெளியான முரசொலி நாளிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இதையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் அதிரை பேரூர் தலைவர் M.M.S அப்துல் கரீம், திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம.குணசேகரன், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, திமுக பேரூர் இணை செயலாளர் தில்லை நாதன், அதிரை பேரூராட்சி கவுன்சிலர்கள், நூர்லாட்ஜ் செய்யது முஹம்மது, N.KS. முஹம்மது செரீப்  ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்ட பழஞ்சூர் K. செல்வம் அவர்களை நேரடியாக சந்தித்து சால்வை அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
 
 
 
 

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.