.

Pages

Monday, November 30, 2015

கண்கள் தானம் செய்த முதியவரின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்பு !

அதிரை அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி ( வயது 92 ). ஐஎன்ஏ சங்கத்தலைவராக இருந்தார். கடந்த [ 25-11-2015 ] அன்று இயற்கை எய்தினார். இவரது கண்களை மகன்கள் ஜெயராமன், காமராஜ் ஆகியோர் தானம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து திருமக்கோட்டை லயன்ஸ் சங்கத்தலைவர் நிரஞ்சன் அளித்த தகவலின் பேரில் அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் ஆறுமுகச்சாமி, பொருளாளர் இர்பான் சேக், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர்கள் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், மேஜர் முனைவர் கணபதி, பேராசிரியர் அல் ஹாஜி, சாரா அஹமது உள்ளிட்டோர் விரைந்து சென்று இறந்த முத்துசாமியின் இரண்டு கண்களை தானமாக பெற்று கும்பகோணம் அரவிந்த் கண் வங்கிக்கு அனுப்பினர்.

இந்த நிலையில் அதிரை லயன்ஸ் சங்கம் மாதாந்திரக் கூட்டம் அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க செயலாளர் பேராசிரியர் அல் ஹாஜி, பொருளாளர் எஸ்ஏசி இர்ஃபான் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கண்களை தானமாக வழங்கிய முத்துசாமி குடும்பத்தினருக்கும், கண்களை தானம் பெற உதவியாக இருந்த திருமக்கோட்டை லயன்ஸ் சங்கத்தலைவர் நிரஞ்சன் ஆகியோருக்கு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

லயன்ஸ் சங்க செயலர் பேராசிரியர் அல் ஹாஜி லயன்ஸ் சங்கம் நடப்பாண்டில் ஆற்றிய சேவை குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் மேஜர் முனைவர் கணபதி வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக லயன்ஸ் சங்கத் தலைவர் ஆறுமுகச்சாமி வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சி முடிவில் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் - உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

1 comment:

  1. ஒருவரது தானத்தால், இரண்டு பேருக்கு பார்வை கிடைப்பதோடு, வாழ்விலும் ஒளியேற்ற முடியும், காலம் முடிந்தபின் கண்களை தானம் கொடுங்கள் .வாழும் போது கண்களை தானம் பெற்று கொடுங்கள் என்று கண் தானத்திற்கு அமரர் முத்துசாமி அவர்கள் முன்னுதாரமாக விளங்குகிறார்; அவரின் மகன்களின் செயலால் தமிழகம் உறுப்பு தானத்தில் முதன்மையாக இருக்கிறது, நன்றிகள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.