.

Pages

Thursday, November 26, 2015

அதிரையில் அபூர்வ 'மயில் மீன்' விற்பனை !

அதிரையை உள்ளடக்கிய தரகர் தெரு, ஆறுமுக கிட்டங்கி தெரு, காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அதிரை அடுத்துள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படும்.

இந்த மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படும் கடைத்தெரு பெரிய மீன் மார்க்கெட்டுக்கு பிரத்தியோகமாக கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அதிரை கடல் பகுதியின் மீனவர் வலையில் சிக்கிய மயில் மீன் இன்று காலை விற்பனைக்கு வந்தது. இந்த அபூர்வ மீனை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். 5 கிலோ எடை கொண்ட மீன் இறுதியில் ரூ 600 க்கு விலை போனது.

இது குறித்து மீன் வியாபாரி மொய்தீன் நம்மிடம் கூறுகையில்...
'மயிலுக்கு தோகைகள் இருப்பதைப் போல இந்தவகை மீன்களுக்கு தோகைகள் இருப்பதனால் இதனை 'மயில் மீன்' என மீனவர்கள் அழைக்கின்றனர். முரல் மீன் வகையை சார்ந்தது. அதிக ருசியை தரும் இந்த மீன் எளிதில் மீனவர்களின் வலையில் சிக்காது. கடலின் ஆழப்பகுதியில் மட்டுமே வசிப்பவை. அதிவேகத்தில் பாய்ந்து செல்லக் கூடியவை. உணவகங்களில் வறுவலுக்காக பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ குணமுடையது' என்றார்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.