.

Pages

Tuesday, November 17, 2015

மாவட்ட ஆட்சியருக்கு அதிரை சேர்மன் கடிதம் !

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் மழைகாலம் முடியும் வரை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் நிலவேம்பு கசாயம் பவுடர் மற்றும் நிலவேம்பு கசாயம் தயாரித்து வழங்க ஏற்பாடு செய்யுமாறு  மாவட்ட ஆட்சியர் முனைவர் என்.சுப்பையன் அவர்களுக்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அதிராம்பட்டினம் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. கடலோரப்பகுதியான இந்த பகுதியை சுற்றி சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முன்னச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சாக்கடை கால்வாய் தூர்வாருதல், பிளிச்சிங் பவுடர் தெளித்தல், கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் மழைகாலம் முடியும் வரை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் நிலவேம்பு கசாயம் பவுடர் மற்றும் நிலவேம்பு கசாயம் தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க உத்தரவிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. வாழ்த்துக்கள் சேர்மன் அஸ்லாம் அவர்களே ...

    ஊரின் தற்போதைய மழை மற்றும் கொசு தொல்லைகளால் பெரும்பாலோருக்கு ஜுரம் சிலருக்கு டெங்கு காய்ச்சல் கூட இருப்பதாக அறியப்பெற்றோம். இது போன்ற முன் எச்சரிக்கை மருந்துகள் மருத்துவ மனையில் போதிய இருப்பில் இருப்பது மிகவும் அவசியம் .

    மழை காலங்களில் குப்பைகளை தேங்க விடாமல் அப்புறபடுத்தவும். இதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுக்கவும் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.