.

Pages

Friday, November 13, 2015

இரட்டைத் தலை குழந்தையை காண அலைமோதும் கூட்டம் !

வங்காளதேசத்தில் உள்ள பிரஹ்மன்பாரியா பகுதியில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளியான ஜமால் மியா என்பவரின் மனைவிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைத் தலை பெண் குழந்தையை காண திரண்டுவரும் ஆயிரக்கணக்கான மக்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்பத்திரி நிர்வாகம் திணறி வருகிறது.

இரண்டு தலைகளுடன் பிறந்த இந்த குழந்தை, இரண்டு மூக்குகளின் நான்கு துவாரங்கள் வழியாக சுவாசித்து வருவதாகவும், இரு வாய்களின் மூலம் பால் குடிப்பதாகவும் பரவிய செய்தியை கேட்டு அந்த ‘அதிசய குழந்தையை’ பார்ப்பதற்கு தலைநகர் டாக்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை ஏராளமான மக்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

சுவாசக் கோளாறுக்காக தீவிர சிகிச்சை பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த குழந்தையும், அதை ஈன்றெடுத்த தாயும் நல்ல நிலையில் இருப்பதாக டாக்கா அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.