.

Pages

Thursday, November 12, 2015

பட்டுக்கோட்டையில் தமுமுக-மமக நடத்திய ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டம் !

தமுமுக - மமக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டம் பட்டுக்கோட்டை மினிபிரியா திருமண மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் மதுக்கூர் ராசிக், கவுன்சிலர் மதுக்கூர் கஃபார், பட்டுக்கோட்டை மமக நகர பொருளாளர் டாக்டர் உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் கோவை செய்யது, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர்கள் தஞ்சை பாதுஷா, சரவண பாண்டியன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் 6 அன்று தஞ்சையில் நடைபெறும் கருஞ்சட்டை அணிந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்ட முடிவில் தமுமுக பட்டுக்கோட்டை நகர செயலாளர் சேக் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிரை, மதுக்கூர், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமுமுக - மமக பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.