.

Pages

Friday, December 16, 2016

+2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கும் என்று அரசு தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறும். மேலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி மார்ச் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான தேர்வு அட்டவணை பின்வருமாறு:

+2 தேர்வுகள்:
02.03.17 - வியாழன் - தமிழ் முதல் தாள்
03.03.17 - வெள்ளி -  தமிழ் இரண்டாம் தாள்
06.03.17 - திங்கள் - ஆங்கிலம் முதல் தாள்
07.03.17 - செவ்வாய்  -  ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.03.17 - வெள்ளி - வணிகவியல் /  மனையியல் / புவியியல்
13.03.17 - திங்கள் - வேதியியல் / கனக்குப் பதிவியியல்
17.03.17 - வெள்ளி - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ்க் தமிழ்)
21.03.17 - செவ்வாய் - இயற்பியல் / பொருளியல்
24.03.17 - வெள்ளி - தொழில் கல்வி தியரி / அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்
27.03.17 - திங்கள் - கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 - வெள்ளி - உயிரியால் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்

எஸ்.எஸ்.எல் சி:
08.03.17 - புதன் - தமிழ் முதல் தாள்
09.03.17 - வியாழன் - தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 - செவ்வாய் - ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 - வியாழன் - ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- திங்கள் - கணிதம்
23.03.17 - வியாழன் - அறிவியல்
28.03.17 - செவ்வாய் - சமூக அறிவியல்
30.03.17 - வியாழன் - மொழி (விருப்பத் தேர்வு) 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.