.

Pages

Monday, December 12, 2016

வாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் !

அதிராம்பட்டினம், டிச-12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்தவர்
முஹம்மது பாருக். இவரது மகன் ராஜிக் அகமது (வயது 36). எலெக்ட்ரிசியனாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று திங்கள்கிழமை பிற்பகல் தனது இருசக்கர வாகனத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் சென்றுகொண்டிருந்தார். வாகனம் ரிச்வே கார்டன் உணவகம் அருகே சென்ற போது அதே சாலையில் பின்புறமாக வந்த திருவாரூரைச் சேர்ந்த கார் ராஜிக் அகமது மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

பின்னர் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துவரப்பட்டு பிரத பரிசோதனைக்காக அதிரை அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
 
 
 

2 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி
    கப்ரின் வேதனையைவிட்டும்.
    நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !
    இவரை சொர்க்கத்தில்புகச்செய்வாயாகஇவரையும்.
    எங்களையும்மன்னிப்பாயாக!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.