தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்தவர்
முஹம்மது பாருக். இவரது மகன் ராஜிக் அகமது (வயது 36). எலெக்ட்ரிசியனாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று திங்கள்கிழமை பிற்பகல் தனது இருசக்கர வாகனத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் சென்றுகொண்டிருந்தார். வாகனம் ரிச்வே கார்டன் உணவகம் அருகே சென்ற போது அதே சாலையில் பின்புறமாக வந்த திருவாரூரைச் சேர்ந்த கார் ராஜிக் அகமது மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
பின்னர் உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துவரப்பட்டு பிரத பரிசோதனைக்காக அதிரை அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇறைவா இவரை மன்னித்து அருள் புரிவாயாக.
இவருடைய கப்ரினை விசாலமாக்கி
கப்ரின் வேதனையைவிட்டும்.
நரகத்தின் வேதனையை விட்டும்மன்னித்து !
இவரை சொர்க்கத்தில்புகச்செய்வாயாகஇவரையும்.
எங்களையும்மன்னிப்பாயாக!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete