.

Pages

Thursday, December 15, 2016

கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் !

தஞ்சாவூர் மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துறை சார்பில், பல்கலைக்கழகம்/கல்லூரி மாணவர்களுக்கான, மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 20.12.2016ஆம் நாள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள்:
1. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் (அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், பொறியியற் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற் கூடங்கள்) ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு கல்லூரியிலிருந்து ஒரு மாணவர் வீதம் அனுப்பப்பட வேண்டும்.

3. போட்டிகளுக்கான தலைப்புகள் பங்கேற்கும் மாணவர்களுக்கு போட்டி நடைபெறும் நேரத்தில் தெரிவிக்கப்படும்.  போட்டிகளுக்கான தலைப்புகள் பெரும்பாலும் தமிழ்மொழி, தமிழ்இலக்கியம் குறித்த வகையில் அமையும்.

4. போட்டி முடிவுகள் போட்டி நடைபெறும் நாளன்றே தெரிவிக்கப்படும். போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முறையே

முதற்பரிசு - ரூ.10,000/-ம் 
இரண்டாம் பரிசு ரூ.7,000/-ம் 
மூன்றாம் பரிசு ரூ.5,000/-ம் வழங்கப்படும்.

5. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

6. போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் தாங்கள் பயிலும் பல்கலைக்கழகம் /  கல்லூரியிலிருந்து முதல்வர் மற்றும் துறைத் தலைவர் அனுமதிக் கடிதத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

இப்போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் அறிய விரும்புவோர் தஞ்சாவ10ர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 3-ஆம் தளத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். (தொலைபேசி எண் : 04362 271530) இவ்வாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.