பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 2016 - 2017-ம் ஆண்டுக்கு தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் (நெல்) மானியத்தில் 45 பம்புசெட்டுகள் வழங்கப்படும். இதில் 35 பொதுப் பிரிவினருக்கும், எஞ்சிய 10 பட்டியல் இனத்தவர்களுக்கும் ஒதுக்கப்படும் என்றார் பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் (பொ) ஆர். சாருமதி.
இதுகுறித்து அவர் வெளிட்ட அறிக்கை:
5 குதிரைத் திறன் கொண்ட பம்புசெட் ஒன்றுக்கு அரசு மானியமாக ரூ. 10,000 அளிக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பம்புசெட்டுகள் வாங்க அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளராக அறிவிக்கப்பட்டுள்ள கும்பகோணம் சுகுமார் ஏஜன்சீஸ் நிறுவனத்தினரை 99444-90210 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பம்புசெட்டுக்கான விலைப்புள்ளியையும், விஏஓவிடம் நெல் சாகுபடிக்கான சிட்டா, அடங்கலும் பெற்று அவற்றை தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் பரிந்துரையுடன், வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பங்களை அளித்தோர் முழு விலையை வங்கி வரைவோலையாகச் செலுத்திய பின்னர் பம்புசெட்டுகள் வழங்கப்படும். பம்புசெட் பெற்ற பின்னர் மானியத் தொகை ரூ. 10,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04373 - 235037 என்ற எண்ணில் பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இதுகுறித்து அவர் வெளிட்ட அறிக்கை:
5 குதிரைத் திறன் கொண்ட பம்புசெட் ஒன்றுக்கு அரசு மானியமாக ரூ. 10,000 அளிக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பம்புசெட்டுகள் வாங்க அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளராக அறிவிக்கப்பட்டுள்ள கும்பகோணம் சுகுமார் ஏஜன்சீஸ் நிறுவனத்தினரை 99444-90210 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பம்புசெட்டுக்கான விலைப்புள்ளியையும், விஏஓவிடம் நெல் சாகுபடிக்கான சிட்டா, அடங்கலும் பெற்று அவற்றை தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் பரிந்துரையுடன், வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பங்களை அளித்தோர் முழு விலையை வங்கி வரைவோலையாகச் செலுத்திய பின்னர் பம்புசெட்டுகள் வழங்கப்படும். பம்புசெட் பெற்ற பின்னர் மானியத் தொகை ரூ. 10,000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04373 - 235037 என்ற எண்ணில் பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.