பட்டுக்கோட்டை, டிச. 14:
பட்டுக்கோட்டை மயில்பாளையம் மரியா டயாபட்டிஸ் மற்றும் ஹெல்த்கேர் சென்டரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ முகாமில் 360 பேர் பங்கேற்றனர்.
மறைந்த பள்ளித் தலைமை ஆசிரியை அணைக்காடு
சி. ஆரோக்கியமேரி நினைவாக நடைபெற்ற இம்முகாமை பண்ணைவயல் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ். ராஜாத்தம்பி தலைமையில், கழுகுப்புலிக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் சு. பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
முகாமில் பங்கேற்ற பயனாளிகளை சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். எட்வின் பரிசோதித்து மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.
முன்னதாக அணைக்காடு ஆரோக்கியமேரி குடும்பம் சார்பில் மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் நவீன் சேவியர் வரவேற்றார். பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு, ஆவணம் கலாம் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் எஸ்.ஆர். சுந்தர்பாபு, ஆலத்தூர் சி.வி. பிரகாஷ், ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் அணைக்காடு அலங்காரமேரி உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை மயில்பாளையம் மரியா டயாபட்டிஸ் மற்றும் ஹெல்த்கேர் சென்டரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ முகாமில் 360 பேர் பங்கேற்றனர்.
மறைந்த பள்ளித் தலைமை ஆசிரியை அணைக்காடு
சி. ஆரோக்கியமேரி நினைவாக நடைபெற்ற இம்முகாமை பண்ணைவயல் ஊராட்சி முன்னாள் தலைவர் எஸ். ராஜாத்தம்பி தலைமையில், கழுகுப்புலிக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் சு. பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
முகாமில் பங்கேற்ற பயனாளிகளை சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். எட்வின் பரிசோதித்து மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மருந்து, மாத்திரைகளை வழங்கினார்.
முன்னதாக அணைக்காடு ஆரோக்கியமேரி குடும்பம் சார்பில் மதுக்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் நவீன் சேவியர் வரவேற்றார். பட்டுக்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு, ஆவணம் கலாம் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவர் எஸ்.ஆர். சுந்தர்பாபு, ஆலத்தூர் சி.வி. பிரகாஷ், ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் அணைக்காடு அலங்காரமேரி உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.