.

Pages

Monday, December 12, 2016

அதிரையில் பத்தர் கடை பூட்டை உடைத்து திருட்டு முயற்சி: நகை, பணம் சிக்காததால் ஏமாற்றம் !

அதிராம்பட்டினம், டிச-12
அதிராம்பட்டினத்தில் நகை பத்தர் கடையின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் வர்தகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் கடைத்தெரு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக பூர்விகமாக நகை பத்தர் தொழில் செய்து வருகிறார். இப்பகுதியில் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அதிகமாக உள்ளன.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் இரவு 8 மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கடையை திறந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இதில் கடையின் உள்ளே நகைகள், பணம் ஏதும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் அப்படியே விட்டுச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் கடைத்தெரு வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேர ரோந்துப்பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.