நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )
சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை : சகோ. A. அபூபக்கர் ( பொருளாளர் )
தீர்மானங்கள்:
1) இந்தக் கூட்டத்தில் நமதூர் புதிய உறுப்பினர்கள் சிலர் வந்து சிறப்பித்தமைக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, இன்ஷா அல்லாஹ் வரும் கூட்டங்களில் நமதூர் எல்லாத் தெருவாசிகளும் புதிய நபர்களும் சிரமத்தை பொருட்படுத்தாது ஆர்வமுடன் வந்து கலந்து நமதூர் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக நடந்து வரும் கூட்டத்தில் பல அறிய கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்பட்டது.
2) இன்ஷா அல்லாஹ் வரும் புதிய ஆண்டு 2017 முதல் ABM ரியாத் கிளை மேலும் செம்மையாகவும் சிறப்பாகவும் திறம்பட செயல்படுவதற்கு நமதூரை சேர்ந்த அனைவரும் வெளிநாட்டில் வசிக்கக்கூடிய சகோதரர்கள் மற்றும் உள்ளூர் வாசிகள் அனைவரும் கூடுதல் ஆர்வமும் பங்களிப்பும், பொருளாதார உதவிகள் மூலம் நமதூர் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு குறையில்லாத முறையில் மேலும் புதிய திட்டங்களுடன் செயல்பட முழு ஒத்துழைப்பும் தருமாறும், வரும் காலங்களில் பைத்துல்மாலின் செயல்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பையும், ஆர்வத்தையும் ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
3) தவிர்க்க முடியாத காரணத்தினால் மாதாந்திர கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ள முடியாத நமதூர்வாசிகளும் உறுப்பினர்களும் மாதாந்திர சந்தாவை நியமிக்கப்பட்டுள்ள ஏரியாவைஸ் பொறுப்புதாரிகளிடம் அவசியம் தவறாது செலுத்தி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்பட்டது
4) பைத்துல்மாலின் மூலம் இன்ஷா அல்லாஹ் வரும் 2017 வருடத்திற்கான பென்ஷன் உதவிக்காக ஆர்வமுடன் பெயர்களை பதிவு செய்த பழைய மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு மேலும் கொடுக்க எண்ணம் உள்ளவர்கள் அடுத்த அமர்விலும் தங்களின் பெயர்களை பதிவு செய்து நன்மையை தேடிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது
6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் JANUARY 2017 13-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு \ ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.