.

Pages

Monday, February 27, 2017

இலவச தாய் - சேய் வாகன (102) சேவையை ஆட்சியர் தொடங்கி வைத்தார் !

தேசிய நல்வாழ்வு திட்டம் - தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் மூலம், இலவச தாய் சேய் வாகனத்தினை (102) TN 20G 2154 என்ற வாகனம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (27.02.2017) மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதாமணி அவர்களிடம் ஒப்படைத்தார்.

தேசிய நல்வாழ்வு திட்டம் - தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் - இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் மூலம், இலவச தாய் சேய் வாகனம் ( JSSK ) இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்ர்சாவூ மாவட்ட கிளைக்கு TN 20G 2154 என்ற வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இச்சேவை மூலம் அரசு தாய் சேய் மருத்துவமனையில் பிரசிவித்த தாய் மற்றும் குழந்தைகள், அதன் பின்னர் ஒரு வருடத்திற்கு தடுப்பூசிக்காகவும் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து அவர்களது இல்லத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகிறது. இந்த 102 சேவை முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். எந்த ஒரு நபருக்கும் சன்மானம் கொடுக்க தேவையில்லை.

இந்த 102 சேவை வாகனம் இன்று முதல் (27.02.2017) தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனையில் இருந்து பொது மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இச்சேவைக்க இலவச தொலைபேசி எண் 102ஐ அணுகி பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் டாக்டர் ஜெயசேகர், தமிழ்நாடு சுகாதார திட்ட தஞ்சை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எட்வின், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் எஸ்.இராஜமாணிக்கம், செயலாளர் யூ.ஜோசப், பொருளாளர் எஸ்.முத்துக்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.