அதிராம்பட்டினம், பிப்-18
அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியின் 4 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்
டி.சிந்துமதி ஆண்டு விழா உரை நிகழ்த்தி, கல்வியில், விளையாட்டில்
சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர், வழக்கறிஞர் ஆர். ராமசாமி, ஜி. கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் எல்கேஜி முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பணமுடிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பங்குபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முன்னதாக அனைவரையும் வரவேற்று, பள்ளி ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் ஈஸ்வரன் வாசித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் ஆற்றிய சாதனைகள் மற்றும் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டார்.
நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியைகள் கவிதா, சார்லஸ், வீரமணி, யாஸ்மின் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். விழா முடிவில் பள்ளித் தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.
விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியின் 4 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்
டி.சிந்துமதி ஆண்டு விழா உரை நிகழ்த்தி, கல்வியில், விளையாட்டில்
சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர், வழக்கறிஞர் ஆர். ராமசாமி, ஜி. கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் எல்கேஜி முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், பணமுடிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பங்குபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முன்னதாக அனைவரையும் வரவேற்று, பள்ளி ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் ஈஸ்வரன் வாசித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் நடப்பு கல்வியாண்டில் ஆற்றிய சாதனைகள் மற்றும் பள்ளியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பட்டியலிட்டார்.
நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியைகள் கவிதா, சார்லஸ், வீரமணி, யாஸ்மின் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். விழா முடிவில் பள்ளித் தலைமை ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.
விழா ஏற்பாட்டினை பள்ளி மேலாளார் எஸ்.சுப்பையன் செய்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.