.

Pages

Tuesday, February 28, 2017

சவூதியர்கள் தாய்லாந்து செல்ல விதித்த தடை நீக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு !

அதிரை நியூஸ்: பிப்-28
1989 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் பணிபுரிந்த தாய்லாந்து நாட்டுக்காரன் ஒருவன் அரண்மனைக்குள் புகுந்து பிரசித்திபெற்ற 'நீள வைரம்' (Fabulous Blue Diamond) உட்பட சுமார் 100 கிலோ தங்கத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றான்.

மேலும், அதே தினத்தில் தாய்லாந்தில் பணியாற்றிய சவுதி தூதரக அதிகாரிகள் 3 பேரும், இரு தினங்களுக்குப் பின் சவுதி வணிகர் ஒருவரும் தாய்லாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொள்ளை மற்றும் கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை தாய்லாந்து அரசு ஒப்படைக்க மறுத்ததாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததாலும் சவுதி அரசு தனது தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களை வேலைக்கு எடுப்பதையும் முற்றிலும் நிறுத்தியது ஆண்டுகள் பல கடந்தும் தொடர்கிறது. இத்தடைகள் விதிக்கப்படும் வரை வருடத்திற்கு சராசரியாக 77,782 சவுதியர்களும் தாய்லாந்து செல்லக்கூடியவர்களாக இருந்தனர்.

இந்நிலையில், சமூக இணையதளம் ஒன்று, தாய்லாந்து மீதான தடைகள் விலக்கிக் கொண்டுள்ளதாக 'போலியான ஸ்க்ரின் ஷாட்' ஒன்றை பரப்பியதை அறிந்த சவுதி அரசு இச்செய்தியை மறுத்துள்ளதுடன் கீழ்க்காணும் 3 நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

1. தாய்லாந்து பெண்ணை மணமுடித்திருக்கும் சவுதியர் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

2. ஸ்டெம் ஸெல் மாற்று (Stem Cell Transplant) அறுவை சிகிச்சைகள் போன்ற வியாதிகளுக்கு தாய்லாந்து மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்ற கட்டாய நிலை ஏற்படும் போது ஆவணங்களை சரிபார்த்து நோயாளி மற்றும் அவருக்கு துணையாக செல்பவருக்கு அனுமதி.

3. தாய்லாந்து வழியாக விமான பயணம் செய்ய நேரிடும் சமயத்தில் மாற்று விமானத்திற்காக (Transit Passenger) குறைந்தபட்சம் 24 மணிநேரம் முதல் அதிகப்பட்சம் 72 மணிநேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டால் மட்டும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் விளக்கத்தை பெற்றும் விசா பெற அனுமதிக்கப்படுவர்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.