அதிராம்பட்டினம், பிப்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சியினர் 2 இடங்களில் கட்சிக்கொடி ஏற்றிவைத்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் குவைத் மண்டல ஊடகச் செயலாளர் அப்துல் சமது தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் முகமது செல்லராஜா, பொருளாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் தக்வா பள்ளிவாசல் மற்றும் ஈசிஆர் சாலை பிஸ்மி மெடிக்கல் அருகில் ஆகிய இரண்டு இடங்களில் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டன.
பின்னர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் மாணவர் இந்தியா அமைப்பின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதில் மஜக அதிரை பேரூர் துணைச் செயலாளர்கள் அபுபைதா, கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சியினர் 2 இடங்களில் கட்சிக்கொடி ஏற்றிவைத்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் குவைத் மண்டல ஊடகச் செயலாளர் அப்துல் சமது தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் முகமது செல்லராஜா, பொருளாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் தக்வா பள்ளிவாசல் மற்றும் ஈசிஆர் சாலை பிஸ்மி மெடிக்கல் அருகில் ஆகிய இரண்டு இடங்களில் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டன.
பின்னர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் மாணவர் இந்தியா அமைப்பின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதில் மஜக அதிரை பேரூர் துணைச் செயலாளர்கள் அபுபைதா, கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.