சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் அதிரை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஜே. சாகுல் ஹமீது, திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், அதிரை பேரூர் பொருளாளர் கோடி முதலி, துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் என்.கே.எஸ் சபீர், தில்லை நாதன், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி ஆர். முல்லை மதி, துணைச்செயலர் தில்லைநாதன், மீனவரணி பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் முஹம்மது இப்ராஹீம், எம். முகம்மது சரீப், நூர்லாட்ஜ் செய்யது, முத்துராமன், பகுருதீன். ஏவிஎம் வரிசை முகமது, இராமநாதன், அன்சாரி, இராஜதுரை, அதிரை பேரூர் இளைஞர் அணி அமைப்பளார் சாகுல் ஹமீது, அகிலன் உட்பட 55 பேர், தாமரங்கோட்டை, திமுகவினர் 33 பேர், உள்ளூர் புதுக்கோட்டை திமுகவினர் 10 பேர் உட்பட மறியலில் ஈடுபட்ட 98 பேர் அதிராம்பட்டினம் போலீசாரால் கைது செய்யப்பட்டு செல்லியம்மன் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.