அதிரை நியூஸ்: பிப்-27
நம்முடைய காலத்தில் பூமிக்கு மேல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் எழுப்பப்படுவதை பார்த்து வருகின்றோம் ஆனால் சுமார் 1000 வருடத்திற்கு முன்வாழ்ந்த நமது முன்னோர்கள் பூமிக்கு அடியில் 18 மாடி உயரத்திற்கு ஓரு வீட்டையல்ல ஒரு நகரையே சகல வசதிகளுடன் உருவாக்கும் வல்லமையை பெற்றிருந்துள்ளனர்.
துருக்கியின் இன்றைய டெரின்கியூ (Derinkuyu) நகரில் அடியில் சுமார் 85 மீட்டர் ஆழத்திற்கு குடைந்தெடுத்து நிர்மாணிக்கப்பட்ட இந்நகரில் சுமார் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் வசிக்கலாம். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுகள் சேமிப்பு வசதிகள், கால்நடைகள், தொழுவங்கள், சமையலறைகள், தேவாலயம், கல்லறை, பள்ளி வகுப்பறைகள், சமுதாயக் கூடம், கிணறுகள் என நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதுடன் தேவையேற்படின் ஒவ்வொரு தளத்தையும் மூடிக்கொள்ள பிரம்மாண்ட பாறைகளால் அமைந்த கதவுகள், இந்நகரத்தைச் சுற்றி எந்நேரமும் வெளியே சென்று வருவதற்கு வசதியாக சுமார் 600 மறைவான வாயில்கள் என தேவையான அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
போர்களால் சூழ்ந்திருந்த பைஸாந்தியப் பேரரசின் ஆட்சிகாலமான (Byzantine Era) கி.பி 780 – 1180 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த நிழவறை நகரம் போர்க்காலங்களில் மக்களை காக்கும் பதுங்கு குழிகளாகவே (Bunkers) திகழ்ந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்.
இதைபோல் துருக்கியின் கப்படோசியா (Cappadocia) பிராந்தியத்தில் காணப்படும் பிற நிலத்தடி நகரங்களையும் பல மைல் தூரத்திற்கு பூமிக்கடியில் செல்லும் சுரங்கப்பாதையின் மூலமும் இணைத்துள்ளனர்.
1963 ஆம் ஆண்டு துருக்கியர் ஒருவர் தனது வீட்டை செப்பனிடுவதற்காக தோண்டியபோது எதேச்சையாக தன் வீட்டுக்கு அடியில் இந்நகரத்தை கண்டுபிடித்தார். தற்போது சுற்றுலாவாசிகளின் வசதிக்காக மின்மயப்படுத்தப்பட்டுள்ள இந்நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கும் செல்ல சுற்றுலாவாசிகள் அனுமதிக்கப்படுகின்றனர், சில பகுதிகளில் கட்டிடத்தின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்
நம்முடைய காலத்தில் பூமிக்கு மேல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் எழுப்பப்படுவதை பார்த்து வருகின்றோம் ஆனால் சுமார் 1000 வருடத்திற்கு முன்வாழ்ந்த நமது முன்னோர்கள் பூமிக்கு அடியில் 18 மாடி உயரத்திற்கு ஓரு வீட்டையல்ல ஒரு நகரையே சகல வசதிகளுடன் உருவாக்கும் வல்லமையை பெற்றிருந்துள்ளனர்.
துருக்கியின் இன்றைய டெரின்கியூ (Derinkuyu) நகரில் அடியில் சுமார் 85 மீட்டர் ஆழத்திற்கு குடைந்தெடுத்து நிர்மாணிக்கப்பட்ட இந்நகரில் சுமார் 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் வசிக்கலாம். மேலும் அவர்களுக்கு தேவையான உணவுகள் சேமிப்பு வசதிகள், கால்நடைகள், தொழுவங்கள், சமையலறைகள், தேவாலயம், கல்லறை, பள்ளி வகுப்பறைகள், சமுதாயக் கூடம், கிணறுகள் என நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதுடன் தேவையேற்படின் ஒவ்வொரு தளத்தையும் மூடிக்கொள்ள பிரம்மாண்ட பாறைகளால் அமைந்த கதவுகள், இந்நகரத்தைச் சுற்றி எந்நேரமும் வெளியே சென்று வருவதற்கு வசதியாக சுமார் 600 மறைவான வாயில்கள் என தேவையான அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
போர்களால் சூழ்ந்திருந்த பைஸாந்தியப் பேரரசின் ஆட்சிகாலமான (Byzantine Era) கி.பி 780 – 1180 ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த நிழவறை நகரம் போர்க்காலங்களில் மக்களை காக்கும் பதுங்கு குழிகளாகவே (Bunkers) திகழ்ந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்.
இதைபோல் துருக்கியின் கப்படோசியா (Cappadocia) பிராந்தியத்தில் காணப்படும் பிற நிலத்தடி நகரங்களையும் பல மைல் தூரத்திற்கு பூமிக்கடியில் செல்லும் சுரங்கப்பாதையின் மூலமும் இணைத்துள்ளனர்.
1963 ஆம் ஆண்டு துருக்கியர் ஒருவர் தனது வீட்டை செப்பனிடுவதற்காக தோண்டியபோது எதேச்சையாக தன் வீட்டுக்கு அடியில் இந்நகரத்தை கண்டுபிடித்தார். தற்போது சுற்றுலாவாசிகளின் வசதிக்காக மின்மயப்படுத்தப்பட்டுள்ள இந்நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கும் செல்ல சுற்றுலாவாசிகள் அனுமதிக்கப்படுகின்றனர், சில பகுதிகளில் கட்டிடத்தின் பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Source: Mirror / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.