.

Pages

Wednesday, February 15, 2017

காதிர் முகைதீன் பள்ளியில் 'வெற்றி நிச்சயம்' மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி !

அதிராம்பட்டினம், பிப்-15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 'வெற்றி நிச்சயம்' என்ற தலைப்பில் வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி தலைமை வகித்தார். காதிர் முகைதீன் கல்லூரி அரபி பேராசிரியர் முகமது இத்ரீஸ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ஏ. அண்ணா சிங்காரவேலு கலந்துகொண்டு பேசுகையில்; மாணவர்கள் மனப்பாடம் செய்வதை தவிர்த்து ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை உள்வாங்கிக் கொண்டு நன்கு பயிற்சி செய்தால் எளிதான வெற்றியை பெறலாம். மாணவர்கள் பயத்தை போக்க வேண்டும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்.

முன்னதாக பள்ளி  கணித ஆசிரியர் எஸ். முத்துகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியை பள்ளித் தமிழாசிரியர் ஏ.அஜ்முத்தீன் தொகுத்து வழங்கினார். முடிவில் தமிழ்ஆசிரியர் எஸ். குணசேகரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், 350 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.