அதிரை நியூஸ்: பிப்-28
அமெரிக்காவின் நாஸா (NASA) விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக 1960 மற்றும் 70 ஆம் ஆண்டுகளில் நிலவுக்கு அப்பல்லோ ராக்கெட்களில் (Apollo Missions) சென்று வந்ததுடன் மீண்டும் நிலவை அமெரிக்கர்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை, சுமார் 45 வருடங்களாக மறந்தே போய்விட்டார்கள் என்றும் சொல்லலாம்.
தற்போது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற தனியார் நிறுவனத்தின் சார்பாக விண்வெளி வீரர்கள் அல்லாத தனிப்பட்ட மனிதர்களை சந்திரனுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டு தலைக்கு 2.5 லட்சம் டாலரும் முன்பதிவு செய்துள்ள சுமார் 600 பேரிடம் வசூலிக்கப்பட்டுவிட்டது, அவர்களில் குறிப்பிடத்தக்க சினிமா பிரபலங்கள் 'லியனார்டோ டி காப்ரியோ (டைட்டானிக்) மற்றும் அஷ்டோன் குட்சர்' ஆகிய இருவரும் அடங்குவர்.
2018 ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லப்போகும் அந்த முதல் இரு நபர்களைப் பற்றிய விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும் அவர்களுக்கு விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சிகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் இந்த வருடமே துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தின் CEO எலன் மஸ்க் (Elon Musk) என்பவரின் சொந்த நிறுவனமே சர்வதேச பணப்பரிவர்த்தனையில் புகழ்பெற்ற Paypal கூடுதலாக டெஸ்லா மோட்டார்ஸ் (Tesla Motors) வாகன நிறுவனத்தின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு இவரது தனியார் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகளை கொண்டு செல்லும் திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்தே நிலவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
மேலும், 2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்வெளி ஓடம் ஒன்றை அனுப்பவும் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுவாக்கில் செவ்வாய் கிரகத்திற்கு (Planet Mars) ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் கொண்ட குழுவை அனுப்பி காலனி நாடு ஒன்றை செவ்வாயில் உருவாக்கும் திட்டமும் மஸ்க்கிடம் குடிகொண்டுள்ளது.
Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
அமெரிக்காவின் நாஸா (NASA) விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக 1960 மற்றும் 70 ஆம் ஆண்டுகளில் நிலவுக்கு அப்பல்லோ ராக்கெட்களில் (Apollo Missions) சென்று வந்ததுடன் மீண்டும் நிலவை அமெரிக்கர்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை, சுமார் 45 வருடங்களாக மறந்தே போய்விட்டார்கள் என்றும் சொல்லலாம்.
தற்போது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற தனியார் நிறுவனத்தின் சார்பாக விண்வெளி வீரர்கள் அல்லாத தனிப்பட்ட மனிதர்களை சந்திரனுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டு தலைக்கு 2.5 லட்சம் டாலரும் முன்பதிவு செய்துள்ள சுமார் 600 பேரிடம் வசூலிக்கப்பட்டுவிட்டது, அவர்களில் குறிப்பிடத்தக்க சினிமா பிரபலங்கள் 'லியனார்டோ டி காப்ரியோ (டைட்டானிக்) மற்றும் அஷ்டோன் குட்சர்' ஆகிய இருவரும் அடங்குவர்.
2018 ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லப்போகும் அந்த முதல் இரு நபர்களைப் பற்றிய விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும் அவர்களுக்கு விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சிகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் இந்த வருடமே துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்வெளி ஓடம் ஒன்றை அனுப்பவும் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுவாக்கில் செவ்வாய் கிரகத்திற்கு (Planet Mars) ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் கொண்ட குழுவை அனுப்பி காலனி நாடு ஒன்றை செவ்வாயில் உருவாக்கும் திட்டமும் மஸ்க்கிடம் குடிகொண்டுள்ளது.
Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.