.

Pages

Friday, February 24, 2017

ஜெ.பிறந்தநாள் விழா: அதிரையில் அதிமுகவினர் ஊர்வலம் !

அதிராம்பட்டினம், பிப்-24
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமாகிய ஜெயலலிதாவின் 69 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிரையில் அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி ஊர்வலமாக சென்றனர்.

நிகழ்ச்சிக்கு அதிமுக அதிரை பேரூர் செயலாளர் என்.பிச்சை தலைமை வகித்தார். வார்டு செயலர் துரை.பாஞ்சாலன் பிறந்த தினவிழா உரை நிகழ்த்தினார். மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத் தலைவர் எம்.பி அபூபக்கர் அதிமுக கட்சி கொடியேற்றி வைத்தார். கட்சியினர் ஜெ. உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக அதிமுகவினர் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி அரசு மகளிர் உயர்நிலைபள்ளி வரை பேரணியாக சென்று திரும்பினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், அதிரை பேரூர் துணைச்செயலர் முஹம்மது தமீம், எம்ஜிஆர் இளைஞர் அணி அதிரை பேரூர் செயலாளர் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் உதயகுமார், மு.க.செ அப்துல் ரஹ்மான், மு.க.செ ரபீக், அஹமது தாகிர், அப்டா தமீம், ஹாஜா பகுரூதீன், செய்யது புஹாரி, பகுருதீன், அ.மு அப்துல் ஜப்பார், லியாக்கத் அலி, யஹ்யாகான், அசோக், காமராஜ், பார்த்தசாரதி, சாகுல்ஹமீது உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.