.

Pages

Saturday, February 25, 2017

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா - பரிசளிப்பு நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், பிப்-25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 68 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் காதிர் முகைதீன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காதிர் முகைதீன் கல்லூரி நிர்வாக அதிகாரப்பூர்வ கையொப்பமாளர் முனைவர் ஏ.ஜலால் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் உதுமான் முகையதீன் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பட்டுக்கோட்டை சார் கருவூல உதவி அலுவலர் ஆ. பாலகிருஷ்ணன் ஒலிம்பிக் கொடி ஏற்றிவைத்து, விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் சுடரை கையில் ஏந்தியவாறு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர்.

தொடக்கத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி வரவேற்று பேசினார். இதில் பள்ளி கடந்த 3 ஆண்டுகளில் மாநில அளவில் கால்பந்து, தடகளம் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் நிகழ்த்திய அபார சாதனைகளை பட்டியலிட்டார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள், ராஜா, ஜெயகாந்தன் ஆகியோர் போட்டிகளை வழிநடத்தி சென்றனர். நிகழ்ச்சிகள். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். விழா முடிவில் குணசேகரன் நன்றி கூறினார்.

பின்னர் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் பாரத் ஸ்டேட் வங்கி மேலாளர் அ. ஹமீத்கான் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் மதுக்கூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்வி ரவிச்சந்திரன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், அலுவலக ஆய்வாக பணியாளர்கள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.