அதிராம்பட்டினம், பிப்-16
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 200 இடங்களுக்கு நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 400 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மையம்
மற்றும் மதுரை மேக்னஸ் அகடாமி சார்பில் வளாக வேலைவாய்ப்பு தேர்வு மற்றும் நேர்காணல் கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை தாங்கி
பேசுகையில்; நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?, வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள மாணவர்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.
முகாம் ஏற்பாட்டினை கல்லூரி தொழில் வழிகாட்டி மையத்தின் அமைப்பாளர் முனைவர் ஏ. சேக் அப்துல் காதர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் ஏ. ஹாஜா அப்துல் காதர் ஆகியோர் செய்தனர்.
இந்நிகழ்வில் மதுரை மேக்னஸ் அகாடமி தலைமை பயிற்றுனர்கள் எஸ். அமீன், மதுசூதன், ஜுபின் நவ்சாத், நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 200 இடங்களுக்கான நேர்காணலை நடத்தினர். இதில் கல்லூரியை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் 400 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதன் முடிவு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் 200 இடங்களுக்கு நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 400 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தொழில் வழிகாட்டி மையம்
மற்றும் மதுரை மேக்னஸ் அகடாமி சார்பில் வளாக வேலைவாய்ப்பு தேர்வு மற்றும் நேர்காணல் கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை தாங்கி
பேசுகையில்; நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?, வேலை வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள மாணவர்கள் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.
முகாம் ஏற்பாட்டினை கல்லூரி தொழில் வழிகாட்டி மையத்தின் அமைப்பாளர் முனைவர் ஏ. சேக் அப்துல் காதர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் ஏ. ஹாஜா அப்துல் காதர் ஆகியோர் செய்தனர்.
இந்நிகழ்வில் மதுரை மேக்னஸ் அகாடமி தலைமை பயிற்றுனர்கள் எஸ். அமீன், மதுசூதன், ஜுபின் நவ்சாத், நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு 200 இடங்களுக்கான நேர்காணலை நடத்தினர். இதில் கல்லூரியை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு பயிலும் 400 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதன் முடிவு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.