அதிராம்பட்டினம், பிப்-25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 35 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 35 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆண்டுவிழா உரை நிகழ்த்தினார். இதில் மாணவிகள் தான் கற்கும் கல்வியோடு இறையச்சம், ஒழுக்கம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து எடுத்துரைத்தார். பள்ளி மாணவிகள் அரசுப் பொதுத்தேர்வில் தமிழக அளவில் மீண்டும் சாதனை நிகழ்த்த கனவு காணும் பள்ளி தலைமை ஆசிரியை சுராஜ் ஆசை நிறைவேற தாம் வாழ்த்துவதாக தெரிவித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பள்ளி முன்னாள் முதுகலை ஆசிரியர் வி. விஜயலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகப்பொறுப்பாளர் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதில் 10 மற்றும் +2 அரசு பொதுத்தேர்வில் சாதனை நிகழ்த்திய மாணவிகளுக்கு கேடயப் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி எம். சுராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் பள்ளி சார்பில் கல்வியில் மாணவிகள் - ஆசிரியைகள் நிகழ்த்திய பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார். மேலும் பள்ளி சார்பில் நடத்தப்பட்ட சமூக விழிப்புணர்வு பணிகளையும் குறிப்பிட்டு பேசினார்.
பள்ளி உடற்கல்வி ஆசிரியை ஜி. அகிலா பள்ளி மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டு ஆண்டரிக்கையாக தொகுத்து வழங்கினார்.
முன்னதாக பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ஹசினா நசீரின் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி இலக்கிய மன்ற பொறுப்பாளர் ந.விஜயா தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை தையல்நாயகி நன்றி கூறினார்.
இவ்விழாவில் ஓ.கே.எம் சிபஹத்துல்லா, கே.கே. ஹாஜா நஜ்முதீன், என்.கே.எஸ் முஹம்மது சரீப், நூருல் அமீன், அப்துல் லத்திப் உள்ளிட்ட பள்ளி ஆசிரியைகள், பெற்றோர்கள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள் - மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.