.

Pages

Tuesday, February 21, 2017

அதிரையின் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு !

அதிராம்பட்டினம், பிப்-21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுற்றுச் சூழல் மன்றம் 90.4” ன் சார்பாக அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, தூய்மையான அதிராம்பட்டினத்தை உருவாக்க, சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் கெளரவ தலைவர், ஹாஜி எம்.எஸ். தாஜுதீன், தலைவர் விவேகானந்தம், பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர், எஸ்.ஏ.சி இர்பான் ஷேக், முன்னாள் கவுன்சிலர் முஹம்மது இப்ராஹீம், எம்.எஃப்.முஹம்மது சலீம், கே. இத்ரீஸ் அஹமத் ஆகியோர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை அவர்களை திங்கட்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;
1. அதிராம்பட்டினம் பேரூராட்சி தெருக்களிலிருந்து அப்புறப்படுத்தப்படும் குப்பைகளை கொட்டி, தரம் பிரித்து, உரம் தயாரிக்க தற்போதுள்ள இடம் போதுமானதாக இல்லை, எனவே புதிய இடத்தை தேர்வு செய்து தர வேண்டும்.

2. பேரூராட்சியில் உள்ள குப்பை அகற்றும் இரண்டு டிராக்டர்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றை பழுது நீக்க வேண்டும். புதிதாக இரண்டு டிராக்டர்களை குப்பை அள்ள வழங்க வேண்டும்.

3. பேரூராட்சியில் 8 வருடங்களாக காலியாக உள்ள துப்புரவு ஆய்வாளர் பணியிடத்தை உடன் நிரப்ப வேண்டும். மாற்றுப் பணியில் இல்லாமல் நிரந்தரமாக ஒரு செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்.

4. பேரூராட்சியில் பொது சுகாதாரத் துறை, கல்வித் துறை, தன்னார்வ தொண்டு அமைப்புகள், மற்றும் அனைத்து சமூக அமைப்புகளை இணைத்து, திடக்கழிவு மேலாண்மை விளக்க கருத்தரங்கம் நடத்த வேண்டும்.

5. போதுமான அளவு துப்புரவுப் பணியாளர்களை நியமித்து, வீடுகளில் சேரும் குப்பைகளை தினந்தோறும் வாங்கி அப்புறப் படுத்த வேண்டும்.

6. தெருக்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அள்ள வேண்டும். சாக்கடை கால்வாய்களை தூர் வார வேண்டும். கொசு ஒழிப்பு பணிகளை செய்ய வேண்டும்.

7. பேரூராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடங்களில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும். செயல்படாமல் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடத்தை உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் வைக்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தபோது, சுற்றுச் சூழல் மன்றத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதாக உறுதியும், அறிவுறுத்தலாக பொதுமக்கள் குப்பைகளை வாய்க்கால், மற்றும் சாக்கடைகளில் கொட்டுவதை தவிர்க்க சுற்றுச் சூழல் மன்றத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டார். மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, சுற்றுச் சூழல் மன்றம் 90.4ன் சார்பில் பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.