.

Pages

Friday, February 17, 2017

பட்டுக்கோட்டை பைத்துல்மால் 5 ஆம் ஆண்டு துவக்க விழாவில் ரூ 1.69 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் !

பட்டுக்கோட்டை, பிப்-17
பட்டுக்கோட்டை பைத்துல்மால் 5 ஆம் ஆண்டு துவக்க விழா வாசவி திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பட்டுக்கோட்டை பைத்துல்மால் கெளரவத் தலைவர் டாக்டர் எஸ். முஹம்மது அஸ்லம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை பைத்துல்மால் தலைவர் பேராசிரியர்  முனைவர் பி. சிலார் முகமது வரவேற்றார். பட்டுக்கோட்டை காதிர் முகைதீன் பள்ளிவாசல் துணை இமாம் மவ்லவி எஸ்.ஏ பீர் முகமது, ரயிலடி பள்ளி முன்னாள் இமாம் மவ்லவி எச். முஹம்மது இப்ராஹீம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தஞ்சை மாவட்ட முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் செயலார் ஜே. கலந்தர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். சென்னை சமூக கல்வி, பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ( சீட் ட்ரஸ்ட் )  தலைவர் எஸ்.எம் ஹிதாயத்துல்லா கலந்துகொண்டு விழா பேருரையாற்றி நலிவடைந்தோருக்கு ரூ 1.69 லட்சம் மதிப்பிலான மாதாந்திர பென்சன் உதவி, மருத்துவம் மற்றும் வாழ்வாதார நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா முடிவில் பட்டுக்கோட்டை பைத்துல்மால் துணைத் தலைவர் ஏ. முஹம்மது அலி ஜின்னா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஜமாத்தார்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.