அதிராம்பட்டினம், பிப்-24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் ரொக்கமில்லா பணப் பரிமாற்றம் செயல்படுத்துதல் தொடர்பாக கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் அதிராம்பட்டினம் அருகே உள்ள சுந்தரநாயகிபுரம் கிராம ஊராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஹமீதுகான் தலைமை வகித்து பேசுகையில்; பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு எளிமையான நடைமுறையை பின்பற்றுவது குறித்து எடுத்துரைத்தார். ரொக்கமில்லா பணப் பரிமாற்றம் குறித்த பயன்களையும், இதற்காக உருவாக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி மென்பொருள் செயலிகளின் செயல்பாடுகள், அவற்றை பயன்படுத்துவது குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சி முடிவில் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை தொடர்பாக கிராம மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலர்கள் கபிலன், பெமிலா, வர்த்தக தொடர்பாளர் சேக் அப்துல்லா உட்பட 150 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் ரொக்கமில்லா பணப் பரிமாற்றம் செயல்படுத்துதல் தொடர்பாக கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் அதிராம்பட்டினம் அருகே உள்ள சுந்தரநாயகிபுரம் கிராம ஊராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் ஹமீதுகான் தலைமை வகித்து பேசுகையில்; பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு எளிமையான நடைமுறையை பின்பற்றுவது குறித்து எடுத்துரைத்தார். ரொக்கமில்லா பணப் பரிமாற்றம் குறித்த பயன்களையும், இதற்காக உருவாக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி மென்பொருள் செயலிகளின் செயல்பாடுகள், அவற்றை பயன்படுத்துவது குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சி முடிவில் ரொக்கமில்லா பணபரிவர்த்தனை தொடர்பாக கிராம மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலர்கள் கபிலன், பெமிலா, வர்த்தக தொடர்பாளர் சேக் அப்துல்லா உட்பட 150 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.