.

Pages

Thursday, February 23, 2017

சீமை கருவேல மரங்களை வரும் பிப்-27 க்குள் அகற்றிகொள்ள ஆட்சியர் அறிவுறுத்தல் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உள்ள
சீமை கருவேல மரங்களை வருகிற 27-02-2017க்குள் நிலத்தின் உரிமையாளர் தாங்களே முன் வந்து அகற்றி கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அகற்ற தவறினால் தனியாருக்கு சொந்தமான
நிலங்களில் உள்ள சீமைகருவேல மரங்கள் உள்ளாட்சித் துறையால் அகற்றப்பட்டு அதற்காக செலவிடப்படும் தொகை இரண்டு மடங்காக நிலத்தின் உரிமையாளர்களிடமிருந்து வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அவர்கள் அறிவித்துள்ளார்.

சீமைக்கருவேல மரங்கள் மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்கு செல்லவிடாமல். நச்சுப் பொருட்களை உற்பத்தி  செய்து பிற தாவரங்கள் வளர்வதையும் தடுக்கிறது,  மேலும். நீர்நிலை ஆதாரங்கள். நீர்வழிப்பாதைகள். மேய்ச்சல் நிலங்கள். விளை நிலங்கள் மற்றும் மீன்பிடி பகுதிகள் ஆகியவற்றில் வளர்ந்து பல்கிப்பெருகி மண்வளத்தை தடுப்பதுடன் கால்நடைகளுக்கான தீவன  புற்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை வழக்கு எண் W.P.(MD) 16485/2015 இல் தீர்ப்பு நாள் 31-01-2017 உத்தரவின்படி தஞ்சாவூர் மாவட்டம் தலைமையிடத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள சீமைகருவேல மரங்களை 27-02-2017 க்குள் நிலத்தின் உரிமையாளர்கள் தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அகற்றத் தவறினால் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் உள்ளாட்சித் துறையால் அகற்றப்பட்டு  அதற்காக செலவிடப்படும் தொகை இருமடங்காக தொடர்புடைய நிலத்தின் உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. வேளாண் நிலங்களையும் பிறவாழ்வாதாரங்களையும் பாதிப்பிற்கு உள்ளாக்கக்கூடிய சீமை கருவேல மரங்களை முழுவதுமாக தஞ்சாவூர் மாவட்ட தலைமையிடத்திற்குட்பட்ட இடங்களில் இருந்து அகற்றுவதில் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.