.

Pages

Monday, February 27, 2017

அதிரையின் சுகாதார சீர்க்கேட்டை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ( படங்கள் )

அதிராம்பட்டினம், பிப்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமாக உற்பத்தியாகும் கொசுக்களை கட்டுப்படுத்தாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாக்கடை தேங்கி நிற்கும் கால்வாய் அருகே இளைஞர்கள் சோடியம் விளக்கு வெளிச்சத்தில் விளம்பர பதாகை வைத்து நூதன போராட்டத்தில் திங்கட்கிழமை இரவு ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சகாபுதீன் மற்றும் அய்வா சங்கத்தினர் கூறுகையில்;
அதிராம்பட்டினம் பேரூராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட பெரிய கடைத்தெரு செல்லும் சாலையின் ( என்.கே.எஸ் சவுண்ட் சர்வீஸ் அருகில் ) குடியிருப்பு கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சாக்கடை தேங்கி காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. கொசு உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக கழிவு நீர் தேங்கி காணப்படும் வடிகால் அருகே சோடியம் விளக்கு வெளிச்சத்தை ஏற்படுத்தி, "பலரை பலிவாங்க துடிக்கும் அதிரை பேரூராட்சியின்  மலேரியா, டெங்கு, பன்றி காய்ச்சல் உற்பத்தியாகும் கூடம் இதுதான்" என்ற வாசகம் அடங்கிய விளம்பரப் பதாகை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.