.

Pages

Tuesday, February 28, 2017

சவூதி உள்நாட்டு சில்லறை பெட்ரோல் விலையில் 30 சதவீதம் உயர்த்த முடிவு !

அதிரை நியூஸ்: பிப்-28
உலகின் முதல்நிலை பெட்ரோல் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா தனது உள்நாட்டு குறைந்த விலை சில்லறை விற்பனையிலும் முதன்மையாகவே திகழ்கிறது. சவுதியில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் லிட்டர் 0.60 ஹலாலாவிலிருந்து (சவுதி காசுகள்) 0.90 ஹலாலாவாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலியம் அல்லாத மாற்றுப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் என்ற அடிப்படையிலும், 2020 ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் பெட்ரோலிய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப படிப்படியாக உள்நாட்டு பெட்ரோல் சில்லறை விலையில் 30 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு எதிர்வரும் 2017 ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும் பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி பெட்ரோலிய அமைச்சகமும் சில்லறை விலை விற்பனையில் ஐக்கிய அரபு அமீரகம் பின்பற்றும் நடைமுறையை பின்பற்ற ஆலோசித்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.