.

Pages

Friday, February 24, 2017

தஞ்சை மாவட்டத்தில் இன்று ( பிப்-24 ) முதல் 28 மதுபானக்கடைகள் மூடல் !

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் 500 மதுபானக்கடைகள் மூடும்படி உத்திரவிட்டார். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 28 மதுபானக் கடைகள் இன்று முதல் (24.02.2017) உடனடியாக மூடப்பட்டது.

கும்பகோணத்தில் 5 மதுபானக் கடைகள், ஒரத்தநாட்டில் 6 மதுபானக்கடைகள், பாபநாசத்தில் 1 மதுபானக்கடை, பேராவூரணியில் 3 மதுபானக் கடைகள், தஞ்சாவூரில் 7 மதுபானக் கடைகள், பூதலூரில் 1 மதுபானக் கடை, திருவையாற்றில் 2 மதுபானக் கடைகள், திருவிடைமருதூரில் 2 மதுபானக் கடைகள், பட்டுக்கோட்டையில் 1 மதுபானக் கடை ஆகிய ஊர்களில் உள்ள 28 மதுபானக் கடைகள் இன்று மூடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஜி.இராமு, உதவி ஆணையர் (கலால்) பா.இன்னாசிமுத்து  ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.