அதிரை நியூஸ்: பிப்-20
துபையின் முக்கிய நெடுஞ்சாலையான ஷேக் ஜாயித் சாலை எப்போதுமே போக்குவரத்தால் நிரம்பி வழியும், இதனால் பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் வணிகர்கள் போன்ற வணிகரீதியில் முக்கியத்துவமுடையோர் தங்களுடைய இலக்கை சரியான நேரத்தில் அடைவதில் பெரும் சிரமப்பட்டனர்.
மேலும், அபுதாபி நிர்மாணித்துள்ள 62 கி.மீ தூரத்திற்கான புதிய நெடுஞ்சாலையும் திறக்கப்படவுள்ளதால் அல் கைல் ரோடு, ஷார்ஜா ரோடு, ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு மற்றும் எமிரேட்ஸ் ரோடு ஆகியவற்றில் பயணிப்போரால் ஏற்படப்போகும் அதீத வாகன போக்குவரத்து போன்றவற்றை கருத்திற்கொண்டும் இந்த தனித்தனி டோல்கேட்களை நிறுவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளன என துபை போக்குவரத்து துறை (RTA) தெரிவித்துள்ளது, அதாவது இனி அல் ஸபா (Al Safa) மற்றும் அல் பர்ஸா (Al Barsha) டோல்கேட்கள் வழியாக செல்லும் ஒவ்வொரு முறையும் சாலிக் கட்டணம் வெட்டப்படும்.
துபை போக்குவரத்து துறையின் சார்பாக ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் 52 கி.மீ தூரத்திற்கு 28 நிலையங்களுடன் ரெட்லைன் மெட்ரோ ரயில், அவற்றில் 2 நிலையங்களிலிருந்து கிரீன் லைன் நிலையத்திற்கு செல்வதற்கான இன்டர்சேஞ்ச் வசதிகள், 12 பஸ் தடங்களிலிருந்து ஷேக் ஜாயித் நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் 156 பஸ்களின் மூலம் தினமும் 1400 சேவைகள் என்பன போன்ற பல போக்குவரத்து வசதிகள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
துபையின் முக்கிய நெடுஞ்சாலையான ஷேக் ஜாயித் சாலை எப்போதுமே போக்குவரத்தால் நிரம்பி வழியும், இதனால் பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் வணிகர்கள் போன்ற வணிகரீதியில் முக்கியத்துவமுடையோர் தங்களுடைய இலக்கை சரியான நேரத்தில் அடைவதில் பெரும் சிரமப்பட்டனர்.
மேலும், அபுதாபி நிர்மாணித்துள்ள 62 கி.மீ தூரத்திற்கான புதிய நெடுஞ்சாலையும் திறக்கப்படவுள்ளதால் அல் கைல் ரோடு, ஷார்ஜா ரோடு, ஷேக் முஹமது பின் ஜாயித் ரோடு மற்றும் எமிரேட்ஸ் ரோடு ஆகியவற்றில் பயணிப்போரால் ஏற்படப்போகும் அதீத வாகன போக்குவரத்து போன்றவற்றை கருத்திற்கொண்டும் இந்த தனித்தனி டோல்கேட்களை நிறுவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளன என துபை போக்குவரத்து துறை (RTA) தெரிவித்துள்ளது, அதாவது இனி அல் ஸபா (Al Safa) மற்றும் அல் பர்ஸா (Al Barsha) டோல்கேட்கள் வழியாக செல்லும் ஒவ்வொரு முறையும் சாலிக் கட்டணம் வெட்டப்படும்.
துபை போக்குவரத்து துறையின் சார்பாக ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் 52 கி.மீ தூரத்திற்கு 28 நிலையங்களுடன் ரெட்லைன் மெட்ரோ ரயில், அவற்றில் 2 நிலையங்களிலிருந்து கிரீன் லைன் நிலையத்திற்கு செல்வதற்கான இன்டர்சேஞ்ச் வசதிகள், 12 பஸ் தடங்களிலிருந்து ஷேக் ஜாயித் நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் 156 பஸ்களின் மூலம் தினமும் 1400 சேவைகள் என்பன போன்ற பல போக்குவரத்து வசதிகள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.