.

Pages

Thursday, February 16, 2017

பி.எஃப்.ஐ அணிவகுப்பு நிகழ்ச்சி: அதிரை விழாக்கோலம் பூண்டது ( படங்கள் )

அதிராம்பட்டினம், பிப்-16
பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா தினம் நாளை பிப்-17 ந் தேதி பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாட அவ்வமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம்
அதிராம்பட்டினத்தில் மாபெரும் யுனிட்டி மார்ச் ( அணிவகுப்பு நிகழ்ச்சி ) மற்றும் பொதுக்கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

இதில் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இதையொட்டி அதிரையின் பிரதான பகுதிகளில் கண்களை கவரும் விதத்தில் கொடி தோரணங்களும், அனைவரையும் அழைக்கும் விதத்தில்
ஆங்காங்கே பிளக்ஸ் பேனர் தட்டிகளும் வைக்கப்பட்டு அதிராம்பட்டினம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.