.

Pages

Wednesday, February 15, 2017

துபாயில் தவணை முறையில் போக்குவரத்து அபராதம் செலுத்த மேலும் ஒரு வசதி !

அதிரை நியூஸ்: பிப்-15
துபையில் போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்காக 1000 திர்ஹத்திற்கு மேல் அபராதங்கள் செலுத்த வேண்டியுள்ளவர்கள் புதிய வசதியின் படி, பர்ஸ்ட் கல்ப் பேங்க் (FGB) கிரடிட் கார்டு மூலம் செலுத்தவதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

வட்டியில் இல்லா தவணைமுறை என்று சொல்லப்பட்டுள்ள இத்திட்டத்தின் வழியாக 3, 6, 9 மற்றும் 12 மாதத் தவணைகளில் பிரித்து அபராதங்களை செலுத்தலாம். இதற்கு துபை போலீஸ் ஆப் (Dubai Police App), போலீஸ் இணையதளம் (Police Website) அல்லது சேவை மையத்திற்கு (Service Center) நேராக சென்றோ இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதேபோன்றதொரு ஒப்பந்த வசதியை கடந்த வருடம் முதல் அபுதாபி கமர்ஷியல் பேங்குடனும் (ADCB), 2014 ஆம் ஆண்டு முதல் எமிரேட்ஸ் என்பிடி பேங்குடனும் (Emirates NBD) துபை போலீஸ் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்றதொரு வசதியை இம்மாத ஆரம்பத்தில் ஷார்ஜா போலீஸூம் துவங்கி இருப்பது நினைவுகூறத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.