.

Pages

Tuesday, February 28, 2017

பெற்றோர்களே கவனம் ! வாஷிங்மெஷினில் சிக்கி இரட்டை குழந்தைகள் மரணம்

அதிரை நியூஸ்: பிப்-28
புது டெல்லியின் வடமேற்கில் உள்ள ரோஹினி என்ற பகுதியில் வசிப்பவர்கள் ரவீந்தர், ரேகா தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் நக்ஷ், நீஷூ என்ற பெயரில் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர்.

நேற்று இக்குழந்தைகளின் தாய் 'டாப் லோடிங் வாஷிங் மெஷினில்' சுமார் 15 லிட்டர் தண்ணீரை நிரப்பி வைத்துவிட்டு சோப்புத்தூள் வாங்க அருகேயிருந்த கடைக்கு சென்றுள்ளார். கடையிலிருந்து திரும்பி வந்தவர் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காணாமல் அதிர்ந்து போய் தேடியுள்ளார் மேலும் அவரது கணவரும் அலுவலகத்திலிருந்து உடனே வீடு திரும்பி தேடியுள்ளார்.

இறுதியாக, குழந்தைகள் இருவரும் டாப் லோடிங் வாஷிங் மெஷினுக்குள் இறங்கி விளையாடியபோது அதிலிருந்த தண்ணீரில் முழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

இறைவன் விதித்த விதி வலியது என்றாலும் பெற்றோர்களே பொதுவாக விளையாட்டுப் பருவக் குழந்தைகள் ஆபத்தை உணராதவர்கள் அவர்களுடைய விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி கவனமுடன் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.