.

Pages

Tuesday, February 28, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் நேர்காணல் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

அதிராம்பட்டினம், பிப்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நேர்காணல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான ஒரு மாத கால பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.எம்.உதுமான் முகையதீன் தலைமை வகித்து விழாவை தொடங்கிவைத்து பேசுகையில்; இந்த பயிற்சி வகுப்பினுடைய முக்கியத்துவம் பற்றியும், நேர்காணலில் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றியும் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இப்பயிற்சி வகுப்புகளை 31.03.2017 வரை காதிர் முகைதீன் கல்லூரியும், பட்டுக்கோட்டை சாய் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன. இதில் Communication Skills மற்றும் Spoken English ஆகியவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் அமைப்பாளர் முனைவர்.ஏ.சேக் அப்துல் காதர் அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்று வருகிறது.

இவ்வகுப்பில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஹாஜா அப்துல் காதர் நன்றி கூறினார்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.