.

Pages

Tuesday, February 28, 2017

மீண்டு... வருகிறது புதிய வடிவில் நோக்கிய 3310 மொபைல் போன்

அதிரை நியூஸ்: பிப்-28
2000 ஆம் வருடத்தில் பின்லாந்து (Finland) நாட்டின் நோக்கியா மொபைல் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டு உலகெங்கும் விற்பனையிலும் நீண்ட உழைப்பிலும் சக்கைபோடு போட்ட மாடல் தான் 3310.

உலகெங்கும் சுமார் 120 மில்லியன் மொபைல் போன்கள் 2004 ஆம் ஆண்டுவரை விற்கப்பட்டதன் மூலம் உலகில் அதிகமாக மக்களால் விரும்பப்பட்ட மொபைல் போன்களின் பட்டியலிலும் நிரந்தர இடத்தையும் பெற்றுள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை உலக மொபைல் சந்தையை தனது கைக்குள் வைத்திருந்தது நோக்கியா, இத்தனை சிறப்புக்கள் இருந்தும் தென் கொரியாவின் சாம்சங் ஸ்மார்ட் போன்களின் வருகையால் தனது மார்க்கெட்டை மொத்தமாக இழந்து மூடுவிழா கண்டது நோக்கியா நிறுவனம்.

நோக்கியா நிறுவன உரிமைகள் மைக்ரோசாப்ட் மொபைல் போன் பிரிவுக்கு 2014 ஆம் ஆண்டு விற்கப்பட்டதை தற்போது HMD குளொபல் எனும் நிறுவனம் கைப்பற்றியுள்ளதுடன் மக்களின் மனங்கவர்ந்த 3310 மொபைல் போன் மாடலை இன்டெர்நெட்டை பயன்படுத்தும் வசதியுடன் மாற்றியமைத்து மறு அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும், நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய புதிய மாடல் ஸ்மார்ட் போன்களையும் களத்தில் இறக்கி மீண்டும் சந்தையில் குதித்துள்ளது புதிய நோக்கியா நிறுவனம்.

பழமை கை கொடுக்குமா பார்ப்போம்...

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.