அதிராம்பட்டினம், பிப்-22
அதிராம்பட்டினத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியிடம்
திருடர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கட்டிப்போட்டு 8 பவுன் தங்க நகை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் வசிப்பவர் காளிமுத்து மனைவி மாரியம்மாள் ( வயது 55 ). பல ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த 3 திருடர்கள் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்து பீரோ சாவியை வாங்கியுள்ளனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த சங்கிலி, மோதிரம் உட்பட 8 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்றனராம்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த மாரியம்மாள் வீட்டுக்கு கை ரேகை நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் ராஜராஜனுடன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று அருகில் உள்ளே மதுக்கடை அருகே படுத்துக்கொண்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிராம்பட்டினத்தில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியிடம்
திருடர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கட்டிப்போட்டு 8 பவுன் தங்க நகை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலையில் வசிப்பவர் காளிமுத்து மனைவி மாரியம்மாள் ( வயது 55 ). பல ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த 3 திருடர்கள் உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்து பீரோ சாவியை வாங்கியுள்ளனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த சங்கிலி, மோதிரம் உட்பட 8 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்துச் சென்றனராம்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த மாரியம்மாள் வீட்டுக்கு கை ரேகை நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் ராஜராஜனுடன் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிச்சென்று அருகில் உள்ளே மதுக்கடை அருகே படுத்துக்கொண்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.