.

Pages

Saturday, February 25, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், பிப்-25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி சார்பில் மிலாது நபி விழா கல்லூரி கலையரங்கில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்து வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோட்டைபட்டினம் மவ்லவி எச். முஹம்மது இப்ராஹீம் தாவூதி சிறப்புரை நிகழ்த்தினார். கல்லூரி நிர்வாக அதிகாரப்பூர்வ கையொப்பமாளர் முனைவர் ஏ. ஜலால் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் சேவைப்பணிக்காக சமூக ஆர்வலர் எம். நிஜாமுதீன் அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ், நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களைப்பற்றி கல்லூரியில் நடந்த 'மனிதநேயம் காத்த மாநபி' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி மற்றும் 'பெண்ணியம் காத்த பெருமானார்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 10 மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக கல்லூரி அரபி பேராசிரியர் எம்.ஏ முஹம்மது இத்ரீஸ் கிராத் ஓதி, அதன் பொருள் விளக்கத்தை தமிழில் கூறினார். நிகழ்ச்சிகளை பேராசிரியர் கே. மணிகண்டன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் பேராசிரியை சாபீரா பேகம் நன்றி கூறினார். இவ்விழாவில் ஊர் பிரமுகர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.