அதிரை நியூஸ்: மே 15:
சவுதியில் செயல்படும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவர் 1 முதல் ஏப்ரல் 30 வரை 661 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு 174 நிறுவனங்கள் மீது ஆட்சேர்ப்பு ஓழுங்குமுறை மற்றும் விதிமீறல் குற்ற வழக்குகள் பதியப்பட்டன.
அதிரடி சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட 14 நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டன மேலும் 40 நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
வேலைக்கு ஆட்சேர்க்கும் நிறுவனங்கள் சட்டவிதி மீறல்களில் ஈடுபட்டால் 19911 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது https://www.musaned.gov.sa/ என்ற இணையதளம் வழியாவோ அல்லது அருகிலுள்ள MLSD branch அலுவலகத்திலோ புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமைச்சகத்தின் முஸாநத் இணையதளத்தில் 605 அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் குறித்த விபரங்களும், சுமார் 40,000 உள்நாட்டு தொழிலாளர்கள் குறித்த விபரங்கள் இருப்பதாகவும், இணையதளம் வழியாக இதுவரை சுமார் 61,411 உள்நாட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்பது நிஜம் தானே!
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியில் செயல்படும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவர் 1 முதல் ஏப்ரல் 30 வரை 661 அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு 174 நிறுவனங்கள் மீது ஆட்சேர்ப்பு ஓழுங்குமுறை மற்றும் விதிமீறல் குற்ற வழக்குகள் பதியப்பட்டன.
அதிரடி சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட 14 நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டன மேலும் 40 நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
வேலைக்கு ஆட்சேர்க்கும் நிறுவனங்கள் சட்டவிதி மீறல்களில் ஈடுபட்டால் 19911 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது https://www.musaned.gov.sa/ என்ற இணையதளம் வழியாவோ அல்லது அருகிலுள்ள MLSD branch அலுவலகத்திலோ புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அமைச்சகத்தின் முஸாநத் இணையதளத்தில் 605 அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் குறித்த விபரங்களும், சுமார் 40,000 உள்நாட்டு தொழிலாளர்கள் குறித்த விபரங்கள் இருப்பதாகவும், இணையதளம் வழியாக இதுவரை சுமார் 61,411 உள்நாட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கதவு அடைக்கப்பட்டால் இன்னொரு கதவு திறக்கும் என்பது நிஜம் தானே!
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.