![]() |
மஸ்ஜித் ஹலீமா அமைந்துள்ள இடம் |
சவுதி, தாயிப் நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் 8 மணிநேரம் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
அல் துஆபா கிராமத்தில் 'பனி சஆது' பகுதியில் அமைந்திருந்த வரலாற்று சிறப்புமிக்கதும், முஹமது நபி (ஸல்) அவர்களுக்கு இளமையில் பாலுட்டி வளர்த்த செவிலித்தாய் ஹலீமா அல் சாதியாஹ் அவர்கள் பெயரில் அமைந்திருந்ததுமான பள்ளி மழை வெள்ளத்தால் முற்றிலும் சேதமடைந்தது.
மழை, வெள்ளத்தை தொடர்ந்து சுகாதாரத் துறை, போக்குவரத்து துறை போன்றவை தங்களின் பணிகளை முடுக்கிவிட்டனர். 20 மேற்பட்டோர் பல்வேறு சாலை விபத்துக்களில் காயமடைந்தனர்.
குடும்பத்தினர் சென்ற 2 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 3 பெண்கள், 2 ஆண்கள், 3 குழந்தைகள் காயமடைந்தனர் அவர்களில் 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகளின் நிலைமை மோசமாகவுள்ளது. அவர்கள் அனைவரும் தாயிபில் உள்ள இளவரசர் சுல்தான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.