.

Pages

Tuesday, May 16, 2017

துபாயில் சைக்கிள் ஓட்டுனருக்கு உதவ சூரிய மின்சக்தியில் இயங்கும் அவசரகால தொலைப்பேசிகள் அமைப்பு!

அதிரை நியூஸ்: மே 16:
துபை, அல் குத்ரா ஏரி அருகே அமைக்கப்பட்டுள்ள ஷேஹ் அல் ஸலாம் சைக்கிள் டிராக்கில் சுமார் 78 கி.மீ தூரத்திற்கு போதிய இடைவெளியில் சூரியஒளி மின்சக்தியில் இயங்கும் 30 அவசரகால போன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

துபை போக்குவரத்துத் துறை, எதிசலாத் தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் துபை போலீஸூடன் இணைந்து இவ்வசதியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு மற்றும் அவசரகால உதவியை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த போன்கள் அனைத்து வகை காலநிலையிலும் இயங்கக்கூடியது, மேலும் 0 முதல்70 டிகிரி வெப்பம் வரை தாங்கக்கூடியது.

பகலில் அனைவருக்கும் தெரியும் வண்ணம் ஆரஞ்சு வண்ண கம்பமும் இரவில் அடையாளம் கண்டு கொள்ள வசதியாக மேல்புறத்தில் விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.